திண்பண்டம் என்று நினைத்து எலி மருந்தை சாப்பிட்ட 2 வயது குழந்தை பல நாள் சிகிச்சைக்கு பிறகு பலியான சோகம்!!
Read Time:1 Minute, 18 Second
கேரள மாநிலத்தில் திண்பண்டம் என்று நினைத்து எலி மருந்தை சாப்பிட்ட 2 வயது குழந்தை பல நாட்கள் உயிருக்கு போராடி பரிதாபமாக பலியாகியுள்ளது.
கடந்த மே 29-ம் தேதி வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருந்த அந்த 2 வயது ஆண் குழந்தை, தாழ்வான ஜன்னல் ஓரத்தில் இருந்த எலி மருந்தை திண்பண்டம் என்று நினைத்து சாப்பிட்டுள்ளது. சிறிது நேரம் கழித்து குழந்தையைப் பார்த்த தாய், அதன் கைகளில் எலி மருந்து இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
கடந்த 10 நாட்களாக மருத்துவனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அந்தக் குழந்தை சிகிச்சைப் பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் மீள முடியாத சோகத்தில் ஆழ்ந்த குழந்தையின் பெற்றோருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.
Average Rating