ஆண் குழந்தைக்காக 15 வருடத்தில் தொடர்ந்து 15 குழந்தைகள் பெற்ற பெண்!!

Read Time:3 Minute, 0 Second

37ec0dee-b4ee-42c3-a296-b1bf980dc0be_S_secvpfகர்நாடக மாநிலம் பிதார் தாலுகாவில் உள்ள சிந்தோல் தாண்டா என்ற இடத்தைச் சேர்ந்தவர் கோவர்தன் ரத்தோடு. இவரது மனைவி சீத்தானி பாய். லம்பானி இனத்தைச் சேர்ந்த இவர்கள் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளனர்.

இவரது கணவர் கோவர்தன் மும்பையில் கூலி வேலை பார்க்கிறார். இவர்களது வாழ்க்கையில் செல்வ செழிப்பு இல்லாவிட்டாலும் குழந்தை செல்வத்துக்கு பஞ்சமில்லை. சீத்தானிபாய் 15 வருடத்தில் தொடர்ந்து 15 குழந்தைகளை பெற்றெடுத்தார். கடைசியாக கடந்த 11–ந்தேதி தனது 15–வது குழந்தையை பெற்றார்.

அதில் விசேஷம் என்னவென்றால் சீத்தானி பாய் பெற்றது அனைத்தும் பெண் குழந்தைகள்தான். எனவே தங்களுக்கு ஒரு ஆண் வாரிசு வேண்டும் என்பதற்காக தொடர்ந்து குழந்தை பெற்று வந்தார்.

ஆனால் அவருக்கு தொடர்ந்து பெண் குழந்தைகளே பிறந்தன. அவற்றில் 6 குழந்தைகள் இறந்து விட்டன. தற்போது 9 குழந்தைகள் உள்ளன. அவர்களில் முதல் 3 மூத்த பெண் குழந்தைகளுக்கு திருமணம் முடிந்து விட்டது.

குடும்பம் வறுமை நிலையில் இருப்பதால் குழந்தைகளை படிக்க வைக்கவில்லை. அவர்கள் கூலி வேலைக்கு செல்கின்றனர். அதன் மூலம் குடும்பம் நடக்கிறது. தொடர்ந்து குழந்தை பெற்றது குறித்து சீத்தாபானி பாய் கூறும்போது, ‘‘ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காகவே தொடர்ந்து குழந்தை பெற்றேன்.

எனது துரதிர்ஷ்டம் அனைத்தும் பெண்ணாகவே பிறந்தது. எனவே ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பும் வரை அதன் முகத்தை பார்க்க மாட்டேன். தற்போதும் பெண் குழந்தைதான் பிறந்து இருக்கிறது. நான் அரசிடம் இருந்து இதுவரை எந்த உதவியும் பெறவில்லை. தற்போது தான் அரசிடம் உதவி வழங்கும்படி கோரிக்கை விடுத்து இருக்கிறேன்’’ என்றார்.

அவரது கோரிக்கையை ஏற்று பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை இவருக்கு ரூ.1 லட்சம் உதவித் தொகை வழங்குவதாக உறுதி அளித்துள்ளது. அதன் மூலம் தனது 7 வயது மகளை விடுதியில் தங்க வைத்து படிக்க வைக்க போவதாக மக்களை பெற்ற மகராசி சித்தானிபாய் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கு இளம்பெண்கள் கடத்தல்: தங்கம் – போலி ரூபாய் நோட்டுகள் கடத்தலும் அதிகரிப்பு!!
Next post சிறுவர்-சிறுமிகளை கடத்திச்சென்று பிச்சை எடுக்க வைத்ததாக 8 பெண்கள் ஒடிசாவில் கைது!!