கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை: இளம்பெண் மர்மச்சாவு-தந்தை போலீசில் புகார்!!

Read Time:1 Minute, 48 Second

d2794042-6a00-4aa1-a76d-495f7d358284_S_secvpfசென்னை திருவொற்றியூரை சேர்ந்தவர் சண்முகராஜ். இவரது மகன் சாந்தி (வயது24). இவருக்கும் விருதுநகர் மாவட்டம் சிவகாசி பாரதிநகரை சேர்ந்த கணேசன் என்பவருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 7 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவை வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த வாரம் சாந்தி தீக்காயங்களுடன் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த தகவலை சாந்தியின் பெற்றோருக்கு கணேசன் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் சாந்தி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து சண்முகராஜிடம் மகளின் சாவு குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சிவகாசிக்கு வந்து தனது மகளின் உடலை பார்த்து கதறி அழுதார்.

இது குறித்து சண்முகராஜ் சிவகாசி கிழக்கு போலீசில் ஒரு புகார் செய்தார். புகாரில் எனது மகள் சாந்தியை, கணேசன் மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். எனவே அவரது சாவில் ‘மர்ம’ம் உள்ளது என தெரிவித்து உள்ளார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் விசாரணை நடத்தி கணேசன், அவரது பெற்றோர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாழப்பாடி அருகே கள்ளக்காதலனுடன் வாழ்ந்து வந்த இளம்பெண் மர்ம சாவு!!
Next post 21-ம் நூற்றாண்டிலும் மாறாத மனிதர்கள்: உயர்சாதி நபரின் மீது நிழல் பட்டதால் தலித் சிறுமி அடித்து, உதைத்து சித்ரவதை!!