சேலத்தில் போலீஸ் ஏட்டு மகன் தூக்கு போட்டு தற்கொலை!!
Read Time:1 Minute, 7 Second
சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் உள்ளது அகரம் காலனி. இந்த பகுதியை சேர்ந்தவர் கடவுள். இவர் சேலம் பேர்லேண்ட்ஸ் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் அழகரசன்(வயது 17). இவர் பிளஸ்–2 படித்து வந்தார்.
அழகரசனுக்கு அடிக்கடி உடல்நிலை பாதித்தது. இதற்கு டாக்டர்களிடம் காண்பித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் குணமாகவில்லை. இதில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அழகரசன் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை அறிந்த பெற்றோர் இதுபற்றி சேலம் அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தனர். இதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அழகரசின் உடலை மீட்டு விசாரித்து வருகிறார்கள்.
Average Rating