கடல் பிராந்தியத்துக்கு சர்வதேச நாடுகள் பாதுகாப்பு வழங்கவேண்டும்.
சர்வதேச நாடுகளை, இலங்கை கடற்பிரதேசத்தின் பாதுகாப்பிற்கு உறுதுணை வழங்குமாறு வெளிவிவகார அமைச்சு கோரியுள்ளது. இலங்கை கடற்பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை நடைமுறைப்படுத்தும் கொள்ளை, கடத்தல் போன்றவை இடம்பெற்ற வண்ணம் உள்ளது. இந்த நடவடிக்கைகளில் புலிகளும் பெரும் பங்கு வகிக்கின்றார்கள். இந்து சமுத்திர கடல் பிராந்தியத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கான ஆட்கடத்தலையும் தடுக்க, சர்வதேச நாடுகள் இலங்கை கடற் பிரதேசத்துக்கு பாதுகாப்பு வழங்கவேண்டுமென வெளியுறவு அமைச்சின் ஆலோசகர் ரொசான் பெரேரா, நியூயோக்கை கேட்டுள்ளார்.