செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளியில் இருந்து தப்பி ரவுடியிடம் தஞ்சம்: 2 பேரை கைது செய்த போலீசார்!!
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் ரவுடிகள் பதுங்கி இருப்பதாக மத்திய குற்றப்பிரிவின் ரவுடி ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தனிப்படை போலீசார் அங்கு சென்ற போது பதுங்கி இருந்த 2 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
அவர்கள் தண்டையார் பேட்டையை சேர்ந்த ரவுடி கோவிந்தராஜ் என்ற மணி, புளியந்தோப்பைச் சேர்ந்த முகமது ரபீக் என்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்து அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டு இருந்த முகமது ரபீக் கூட்டாளிகளுடன் சேர்ந்து கடந்த 22.04.15 அன்று காவலாளிகளை டியூப்லைட்டால் தாக்கி தப்பி வந்திருப்பது தெரிந்தது.
பின்னர் முகமது ரபீக், ரவுடி கோவிந்தராஜிடம் தஞ்சம் அடைந்து குற்றச்செயலில் ஈடுபட திட்டம் தீட்டியபோது சிக்கிக் கொண்டான்.
கைதான 2 பேரிடமும் புளியந்தோப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவிந்த ராஜ் மீது 2 கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. முகமது ரபீக் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதமும் செங்கல்பட்டு சிறையில் இருந்து தப்பியவன் ஆவான். பின்னர் மறு நாளே அவனை திருவான்மியூரில் போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
Average Rating