சீர்காழி அருகே தாய் இறந்த துக்கத்தில் மகன் தூக்குபோட்டு தற்கொலை!!
சீர்காழி அடுத்த பெருமங்கலம் பகுதியில் வசித்து வந்தவர் ராஜவள்ளி(வயது 55). இவர் நேற்று உடல்நல குறைவால் இறந்து போனார். இந்த தகவல் மேற்கு வங்கத்தில் மத்திய பாதுகாப்பு படையில் பணிபுரியும் அவரது மகன் பாலமுருகனுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் புறப்பட்டு சீர்காழிக்கு வந்தார். அவர் தனது தாயின் உடலை பார்த்து கதறி அழுதார். தாய் இறந்த துக்கம் தாங்கமுடியாமல் மனமுடைந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத அறைக்கு சென்று உள்ளே பூட்டி கொண்டு அங்கிருந்த மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் அறைக்கு சென்று நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாமல் இருந்ததை கண்ட அவரது உறவினர்கள் அந்த அறையின் கதவை தட்டியுள்ளனர். ஆனால் கதவு அவர் திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர்கள் அறையின் ஜன்னலை திறந்து பார்த்தனர். அப்போது பாலமுருகன் தூக்குபோட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பாலமுருகனுக்கு கடந்த 2012–ம் ஆண்டு திருமணம் முடிந்தது. அவருக்கு உஷா என்ற மனைவியும் 6 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். தாய் இறந்த துக்கத்தில் மகன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating