குஜராத்தில் சட்டவிரோதமாக ஆயுத விற்பனை செய்த மத்திய பிரதேச வியாபாரி கைது-10 துப்பாக்கிகள் பறிமுதல்!!
குஜராத்தில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் விற்பனை செய்த நபரை தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து, அவரிடம் இருந்து 10 துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.
வதோதரா பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர் சட்டத்திற்குப் புறம்பாக ஆயுதங்கள் விற்பனை செய்வதாக தீவிரவாத தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் வதோதரா சிறப்பு நடவடிக்கை குழுவைச் சேர்ந்த அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அவ்வகையில் நேற்று கபுராய் கிராஸ் ரோடு பகுதியில் கண்காணித்தபோது, ஆயுத வியாபாரியான ரூப்சிங் ஜூவன்சிங் காரத் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள 10 துப்பாக்கிகள் மற்றும் கேட்ரிட்ஜ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த காரத் மீது நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோத ஆயுதவிற்பனை தொடர்பாக 23 வழக்குகள் உள்ளதாகவும், சமீபத்தில் தெற்கு குஜராத் மற்றும் சவுராஷ்டிர பிராந்தியத்தில் ஆயுதங்களை விற்பனை செய்ததாகவும் தீவிரவாத தடுப்பு பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள காரத், யாரிடம் இந்த சட்டவிரோத ஆயுத விற்பனையில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது? யார் யாருக்கெல்லாம் விற்பனை செய்தார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
Average Rating