அம்பை அருகே திருமண ஆசைகாட்டி பெண் கற்பழிப்பு: வாலிபர் கைது!!
அம்பை அருகே உள்ள கேளையாபிள்ளையூரை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் சாஸ்திரவள்ளி (வயது23). இவர் திருமணமான சில மாதங்களிலேயே கணவரை பிரிந்து தந்தை வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் சாஸ்திர வள்ளிக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த ராமச்சந்திரன் (30) என்ற வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இரண்டு பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசினர். அப்போது ராமச்சந்திரன் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி சாஸ்திரவள்ளியுடன் உல்லாசம் அனுபவித்தார்.
இந்த விபரம் சாஸ்திர வள்ளியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேருக்கும் திருமணம் செய்து வைக்க பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது ராமச்சந்திரன் சாஸ்திர வள்ளியை திருமணம் செய்ய மறுத்து விட்டார். இதனால் சாஸ்திரவள்ளி அம்பை மகளிர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விசாரணை நடத்தி திருமண ஆசை காட்டி கற்பழித்ததாக வழக்குப்பதிவு செய்து ராமச்சந்திரனை கைது செய்தனர்.
Average Rating