கள்ளத்தொடர்பை தட்டிக் கேட்டதால் அடித்து கொடுமைப்படுத்தியதாக தாசில்தார் மீது போலீசில் மனைவி புகார்!!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் எட்டா மாவட்டத்தில் உள்ள ஜலேசா தாலுகாவின் தாசில்தாராக பதவி வகிப்பவர், ஆனந்த் சிங். நேற்று இவர் தனது வீட்டில் ஒரு பெண்ணுடன் தனிமையில் இருந்தபோது உள்ளே நுழைந்த தாசில்தாரின் மனைவி இந்த தகாத தொடர்பை கண்டித்து, தட்டி கேட்டுள்ளார்.
இதனால் ஆவேசம் அடைந்த தாசில்தார் ஆனந்த் சிங், மனைவி வந்தனாவை தாறுமாறாக அடித்து, உதைத்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த வந்தனா, அருகாமையில் உள்ள போலீஸ் நிலையத்தில் கணவர் மீது புகார் அளித்துள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது, காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் வந்தனாவுடன் கடந்த 2005-ம் ஆண்டில் இருந்து நான் பேச்சுவார்த்தை கூட வைத்து கொண்டது கிடையாது. அவர் என்னை விட்டுப் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார் என போலீஸ் விசாரணையில் தாசில்தார் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Average Rating