நாடு முழுவதும் பசுவதைக்கு தடை விதிக்கவேண்டும்: அசோக் சிங்கால்!!
Read Time:54 Second
வி.எச்.பி.யின் தலைவர் அசோக் சிங்கால் பசுவதைக்கு நாடு முழுவதும் தடை விதிக்கவேண்டும் என்று கோரியுள்ளார்.
உத்திரப் பிரதேசத்தின் அருகே ஒரு கிராமத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய அசோக் சிங்கால் “நாட்டின் முன்னேற்றத்துக்கு பசுவதைக்கு தடை விதிப்பது முக்கியம். பசுவதைக்கு தடை விதிப்பதன் மூலம் வரும் 2020 அளவில் இந்தியா ஒரு இந்து தேசமாக மாறிவிடும்” என தெரிவித்தார்.
மேலும் நாடு முழுவதும் பசுவதைக்கு தடை விதிக்கும் நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Average Rating