சிவகாசி அருகே கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் தொல்லை: மாணவர் கைது!!
Read Time:1 Minute, 12 Second
சிவகாசி அருகே உள்ள ரிசர்வ் லைன் நேரு நகரை சேர்ந்தவர் சண்முகநாதன். இவரது மகன் முருகேஷ் பிரபு (வயது19). இவர் சிவகாசியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார்.
இந்த நிலையில் மாணவர் முருகேஷ் பிரபு, சிவகாசி சீதாகாதி நடுத்தெருவில் உள்ள ஒரு வீட்டிற்குள் அத்துமீறி புகுந்து அங்கிருந்த கல்லூரி மாணவி ஒருவரை தனது இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அந்த மாணவியை வீட்டின் அருகில் இறக்கி விட்டுவிட்டு, முருகேஷ் பிரபு தப்பி ஓடி விட்டார். இது குறித்து கல்லூரி மாணவியின் தந்தை சிவகாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவனை கைது செய்தனர்.
Average Rating