இந்தியாவின் எதிர்ப்பை அடுத்து சர்வதேச எல்லையில் அமைக்கப்பட்டிருந்த உளவு கேமராக்களை அகற்றியது பாகிஸ்தான்!!
Read Time:1 Minute, 9 Second
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடைப்பட்ட சர்வதேச எல்லையில் பொருத்தப்பட்டிருந்த உளவு கேமராக்களை பாகிஸ்தான் அகற்றியுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு பாகிஸ்தான், ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள சர்வதேச எல்லைப்பகுதியில் சுமார் 10 உளவு கேமராக்களை 15 முதல் 20 அடி உயரத்தில் அமைத்தது. இந்த கேமராக்கள் மூலம் பார்மர், ஜெய்சால்மர், பிகானர் போன்ற பகுதிகளை அந்நாடு கண்காணித்தது.
ஆனால், இதற்கு இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை எதிர்ப்பு தெரிவித்தது. இதனை அடுத்து நேற்று எல்லையில் அமைக்கப்பட்டிருந்த அனைத்து கேமராக்களையும் பாகிஸ்தான் அகற்றிவிட்டதாக எல்லைப் பாதுகாப்புப் படை டி.ஐ.ஜி. கவுதம் தெரிவித்துள்ளார்.
Average Rating