கேலி செய்ததை எதிர்த்ததால் இளம்பெண்ணை 35 தடவை கத்தியால் குத்தி கொன்ற அண்ணன்–தம்பி கைது!!
டெல்லி ஆனந்த் பர்பத் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவரை அந்த பகுதியைச் சேர்ந்த அண்ணன்– தம்பி இருவர் சேர்ந்து அடிக்கடி கிண்டல் செய்து வந்தனர்.
ஒரு கட்டத்தில் எல்லை மீறி நடந்து அந்த பெண்ணை கையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்ய முயன்றனர். இதுபற்றி கடந்த 2013–ம் ஆண்டு அந்த பெண் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணன் – தம்பி இருவர் மீதும் நடவடிக்கை எடுத்தனர்.
தங்கள் மீது புகார் கொடுத்ததால் அந்த பெண்ணை பழி வாங்க திட்டமிட்டனர்.
நேற்று முன்தினம் இரவு அந்த பெண் கடைக்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றார். அவர்பின் தொடர்ந்து சென்ற வாலிபர்கள் இருவரும் அந்த பெண்ணை கிண்டல் செய்தனர்.
ஆத்திரம் அடைந்த அந்த பெண் தட்டி கேட்டதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே ஆத்திரம் அடைந்த இருவரும் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்த பெண்ணை குத்தினார்கள். கத்தி குத்து விழுந்ததும் அலறி துடித்த அந்த பெண் தன்னை காப்பாற்றும்படி கூச்சலிட்டபடியே தெருவில் ஓடினார். ஆனால் யாரும் காப்பாற்ற முன் வர வில்லை.
உயிர் பிழைப்பதற்காக ஒரு வீட்டுக்குள் புகுந்தார். அந்த வீட்டில் இருந்தவர்களும் அந்த பெண்ணை வெளியே விரட்டி விட்டனர்.
தங்கள் கையில் சிக்கிய அந்த பெண்ணை தங்கள் ஆத்திரம் தீரும் வரை சர மாரியாக கத்தியால் குத்தினார்கள்.
உடலில் 35 இடங்களில் கத்திக்குத்து பட்டு அந்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணின் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையாளிகளான அண்ணன்–தம்பி இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Average Rating