அதுருகிரியவில் கொள்ளை!!
Read Time:1 Minute, 11 Second
அதுருகிரிய – 10ம் கட்டைப் பகுதியிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை முகத்தை மூடிய படி வந்த நால்வர் இவ்வாறு கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இதன்போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நிறுவனத்தின் பாதுகாப்பு ஊழியர் காயமடைந்துள்ளார்.
இவர் சிகிச்சைகளுக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன் நிறுவனத்தில் இருந்த சில தங்க நகைகள் கொள்ளையர்களால் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்த மேலதிக விசாரணைகளை அதுருகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating