மஹிந்தவுக்கு அவமதிப்பு – மங்கள, அனுர உள்ளிட்ட ஐவருக்கு எதிராக நடவடிக்கை!!
Read Time:1 Minute, 14 Second
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் பொய் பிரச்சாரங்களை மேற்கொண்ட குற்றச்சாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு நேற்றையதினம் இது தொடர்பில் கடிதம் அனுப்பியுள்ளதாக சட்டத்தரணி சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
இன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்படி அமைச்சர் மங்கள சமரவீர, பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, நலின் பண்டார, அனுர குமார திஸாநாயக்க மற்றும் ஷில்பி சுனில் பெரேரா ஆகியோருக்கு எதிராகவே இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Average Rating