வாயுத் தொல்லையை போக்கும் வர்ணா முத்திரை..!!
Read Time:1 Minute, 7 Second
வர்ணன் என்பது நீரைக் குறிக்கும்.
செய்முறை:
உங்கள் சுண்டு விரலின் நுனி, கட்டை விரலின் நுனியைத் தொட வேண்டும். மற்ற மூன்று விரல்கள் விரிந்து நேராக இருக்க வேண்டும். இந்த முத்திரை செய்வதால் உடலில் நீர்த்தன்மையைத் தக்க வைப்பதோடு உடலில் நீரின்மையால் ஏற்படும் நோய்களிலிருந்தும் காக்கும். இந்த முத்திரை செய்ய குறிப்பிட்ட நேர வரையறை கிடையாது. எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செய்யலாம்.
நன்மைகள்:
உங்கள் உடலினுள் சுத்தத்தை நிலை நிறுத்தச் செய்யும். வாயுத் தொல்லையால் ஏற்படும் வலிகளைக் கட்டுப்படுத்தும். உங்கள் முகத்தில் சுருக்கம் ஏற்படாமல் காக்கும்.
Average Rating