திருந்தாத டெல்லி: தாய்க்கு உதவியாக இருந்த ஆப்கானிஸ்தான் பெண்ணை கற்பழிக்க முயன்ற ஆஸ்பத்திரி ஊழியர் கைது!!

Read Time:2 Minute, 18 Second

ede3160b-f1c4-4c50-b081-a92cf9b3dfd4_S_secvpfநாட்டின் தலைநகரான டெல்லியின் சாலைகளில் மட்டுமல்ல.., ஆஸ்பத்திரி, ஆலயங்கள் போன்ற பொது இடங்களில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக நோயுற்ற தனது தாய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அழைத்துவந்த பெண்ணை இங்குள்ள தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் கற்பழிக்க முயன்ற சம்பவம் அமைந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து நோயுற்ற தனது தாய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக டெல்லிக்கு அழைத்து வந்த அந்தப் பெண், சாகெட் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அவரை அனுமதித்தார். அவருக்கு துணையாக தனது தங்கையுடன் அருகில் இருந்து கவனித்து வந்தார்.

கடந்த 24-ம் தேதி அதிகாலை தாயாரின் கட்டிலின் அருகே தரையில் படுத்திருந்த அந்தப் பெண்ணை அதே ஆஸ்பத்திரியில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்யும் ஒருவன் கற்பழிக்க முயன்றான். உறக்கத்தில் இருந்து விடுபட்ட அந்தப் பெண் கூச்சலிடவே, அந்த நபர் தப்பியோட தொடங்கினான்.

தனது தங்கையுடன் சேர்ந்து அந்த நபரை பிடித்த ஆப்கானிஸ்தான் பெண்ணுடன் அந்த காமுகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டான். சத்தம் கேட்டு விரைந்துவந்த இதர ஊழியர்கள் அவனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரையடுத்து, பிடிபட்ட அமர் சிங்(21) என்பவன் மீது வழக்குப்பதிவு செய்த சாகெட் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாலக்காடு: 10–ம் வகுப்பு மாணவி மின்சாரம் தாக்கி பலி!!
Next post திருச்சியில் தங்கியிருந்து தொடர் கைவரிசை: சென்னை வாலிபர்கள் கைது!!