ஒரே மாதத்தில் 400 விடுதலைப்புலிகளை கொன்று விட்டோம்; ராணுவம்
Read Time:1 Minute, 17 Second
விடுதலைப்புலிகள் அரசியல் பிரிவு தலைவர் தமிழ் செல்வன் மற்றும் 5 தளபதிகளை கொன்றதை ராணுவம் பெரிய வெற்றியாக கருதுகிறது. இது தொடர்பாக ராணுவ செய்தி தொடர்பாளர் உதய நாணயச்சரா கூறியதாவது:- வடக்கு பகுதியில் சிங்கள ராணுவம் தொடர்ந்து பல் வேறு வெற்றிகளை குவித்து வருகிறது. கடந்த ஒரே மாதத்தில் மற்றும் 400 க்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகளை கொன்று விட்டோம். இப்போது பொதுமக்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு தருகின்றனர். அக்டோபர் மாதம் பொதுமக்களிடம் இருந்து 29 வகையான தகவல்கள் குவிந்தன. அதனால் பெரும் வெற்றிகளை எங்களால் பெறமுடிந்தது. வன்னி மற்றும் வடக்கு யாழ்பாணப் பகுதியில் நேற்று 7 விடுதலைப்புலிகள் கொல்லப் பட்டனர். இந்த சண்டையில் ராணுவம் தரப்பில் ஒருவர் உயிர் இழந்தார். மற்றொருவர் காயம் அடைந்தார். இவ்வாறு அவர் கூறினார்.