சர்வதேச விசாரணை கோரி யாழில் கையெழுத்து வேட்டை!!
சர்வதேச விசாரணையினை வலியுறுத்தி யாழ். நகரப்பகுதியில் கையெழுத்து பெறும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையில் மனித உரிமை மீறல்களை புரிந்தோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் செயன்முறை பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையினை வலியுறுத்துகின்றோம்’ எனும் தொனிப்பொருளில் இந்த கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முண்னணியும், யாழ்.பல்கலைக்கழகத்தினரும் இணைந்து யாழ். மத்திய பஸ் நிலையத்தின் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணியளவில் கையொப்பம் பெறும் செயற்பாட்டை முன்னெடுத்தனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், சிவஞானம் சிறிதரன், எம்.கே.சிவாஜிலிங்கம், மற்றும், மத குருமார்கள், கன்னியாஸ்திரிகள், பெற்றோர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் மற்றும், ஊழியர் சங்கத்தினர், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எனப் பலர் கலந்து கொண்டு தமது ஆதரிவினை தெரிவித்து கையொப்பத்தினை இட்டனர்.
Average Rating