சட்டவிரோதமாக ஒரு தொகை மருந்துகளை நாட்டுக்கு கொண்டுவந்தவர் சிக்கினார்!!
Read Time:1 Minute, 1 Second
சட்டவிரோதமாக ஒரு தொகை மருந்துகளை நாட்டுக்கு கொண்டுவந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் டில்லியில் இருந்து இலங்கைக்கு வந்த ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளதாக, சுங்க ஊடகப் பேச்சாளர் லேஸ்லி காமினி குறிப்பிட்டுள்ளார்.
சந்தேகநபரின் பயணப் பையில் இருந்து மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இவர் 58 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
விமான நிலைய சுங்கப் பிரிவினர் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating