சேயா வழக்கு – 17 வயது மாணவன் உள்ளிட்ட இருவர் விளக்கமறியலில்!!
Read Time:58 Second
கொடதெனியா பகுதியில் 5 வயது சிறுமி சேயா துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முதலில் கைதுசெய்யப்பட்ட, 17 வயது சிறுவன் உள்ளிட்ட இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று சந்தேகநபர்களை மினுவான்கொட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை, எதிர்வரும் 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் துனேஷ் பிரயஷாந்த எனப்படும் கொண்டைய்யா எதிர்வரும் 5ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating