மாத்தறையில் உணவகம் ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்…!!
மாத்தறை பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் மீது இனம்தெரியாத நபர்கள் கைக்குண்டுத்தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
மாத்தறை, அக்குரஸ்சை நகரில் அமைந்துள்ள உணவம் ஒன்றின் மீதே நேற்றிரவு இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது.
வெளியிலிருந்து எறியப்பட்ட கைக்குண்டு உணவகத்தின் கண்ணாடிக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே விழுந்த போதும், அதிர்ஷ்டவசமாக வெடிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.
கைக்குண்டு வெடித்திருந்தால், அந்நேரத்தில் உணவருந்திக்கொண்டிருந்த ஏராளமானோரின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்தவுடன் விரைந்து வந்த மாத்தறை ராணுவ முகாமின் வெடிகுண்டு செயலிழக்கவைக்கும் பிரிவினர் கைக்குண்டை செயலிழக்க வைத்துள்ளனர்.
குண்டுத்தாக்குதலுக்கான காரணம்இதுவரை அறியப்படவில்லை என்பதுடன் சந்தேக நபர்களும் கைது செய்யப்படவில்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ராணுவத்தினர் பயன்படுத்தும் கைக்குண்டு ஒன்றே குறித்த உணவகத்தின் மீது எறியப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பான விசேட புலனாய்வு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Average Rating