அரிய வகை பறவையை ஆராய்ச்சிக்காக கொன்ற அறிவியலாளர்…!!
Read Time:1 Minute, 23 Second
ஓஷியானாவின், சாலமன் தீவுகளில் மட்டுமே வாழ்வதாக அறியப்படும் மீசைகொண்ட கிங்பிஷர், அரிய வகைப் பறவையாக ஆய்வாளர்களால் கருதப்படுகின்றது.
அமெரிக்காவின் தேசிய வரலாறு அருங்காட்சியகத்தில், பசிபிக் திட்டங்களில் பணிபுரிந்து வரும் கிறிஸ் பிலார்டி, இந்த அரிய பறவையை உயிருடன் பிடித்து அதனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு, பின்னர் அதை தானே கொன்றுள்ளார்.
ஏன் கொன்றார் எனக் காரணம் கேட்டதற்கு, ‘இது அரிய பறவையெல்லாம் கிடையாது. எனினும், இதைப்பற்றி மேலும் ஆராய்ச்சி செய்து தெரிந்துகொள்வதற்காகவே, கொன்றேன்’ எனத் தெரிவித்துள்ளார். இவரது ஆராய்ச்சியாளர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பக்கம், அரிய வன விலங்குகளைப் பாதுகாக்க வேண்டிய அத்தியாவசியத்தைத் தெரிவிக்கும், இதுபோன்ற அறிவியலாளர்களே அதைக் கொன்று குவிப்பது எந்த விதத்தில் நியாயம்?
Average Rating