வவுனியா வடக்கில் பரந்தாமனின் திருவிளையாடல்கள்..!! (இது எப்படி இருக்கு)
வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் அப் பகுதி பிரதேச செயலாளர் பரந்தாமன் மற்றும் அவரது சகாக்களால் மக்களதும் அரச அதிகாரிகளினதும் பெருமளவு காணிகள் அபகரிக்கப்பட்டு வருகிறது.
பெருமளவு நிதி லஞ்சமாக பெறப்பட்டு பல நிலங்கள் பணம் படைத்தவர்களுக்கு கைமாறியுள்ளது. முன்னாள் காணி உத்தியோகத்தர் அவர்களும் இதற்கு உடந்தையாக செயற்பட்டுள்ளார்.
புளியங்குளம் வடக்கு கிராம அலுவலர் தனுசா அவர்களும் வீட்டுத் திட்டம், காணி வழங்கல் போன்றவற்றில் லஞ்சம் பெற்றுள்ளமை அம்பலமாகியுள்ளது. அதற்கான ஆதாரங்கள் பலவும் சிக்கியுள்ளன.
பரந்தாமனதும் அவரது சகாக்களினதும் திருவிளையாடல்கள் வவுனியா வடக்கில் தொடர்கின்றன. மக்கள் பிரதிநிதிகள் பலரிடம் முறையிட்டும் தீர்வு இல்லை என மக்கள் ஆதங்கம்.
குறிப்பு: இவை தொடர்பான ஆதாரங்கள் பல எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. அவை தொடர்ந்து வெளியடப்படும். யார் மீதும் பழி சுமத்துவதோ அல்லது யாரையும் பழி வாங்குவதோ எமது நோக்கம் அல்ல. மக்களுக்காக அதிரடியின் குரல் உண்மையாய் ஒலிக்கும்.
இது தொடர்பில் சம்மந்தப்பட்டவர்கள் விளக்கம் தர விரும்பில் [email protected] என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
Average Rating