வேலூரில் இளம்பெண் மர்ம சாவு: வரதட்சணை கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு…!!

Read Time:1 Minute, 9 Second

ed601557-73b1-4b3d-ace1-6614a09a486a_S_secvpfவேலூர் மக்கான் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் தென்னரசு (வயது 29). மேள இசை கலைஞர். இவருடைய மனைவி அனிதா லெட்சுமி (வயது 23). கடந்த 2 ஆண்டுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது. ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவன் – மனைவி இடையே தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு அனிதாலெட்சுமி வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். வேலூர் வடக்கு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அனிதாலெட்சுமியை வரதட்சணை கொடுமை செய்து கொன்று விட்டதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்தனர். வேலூர் வடக்கு போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமாகி 2 ஆண்டுகள் மட்டுமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெறுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குளித்தலை அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல்: ஆசிரியர்–டிரைவர் உடல் நசுங்கி பலி…!!
Next post பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த ஆசிரியை கடத்தல்..!!