கல்பிட்டியில் அடையாள காணப்படாத நபரின் சடலம்..!!
Read Time:1 Minute, 1 Second
புத்தளம் கல்பிட்டி பிரதேசத்தில் கந்தலி, சேதாவாடி பகுதியில் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்கப்பட்டுள்து.
கயிட்ஸ் பயிற்சி பாடசாலைக்கு அருகில் இந்த சடலம் கிடந்துள்ளது. சடலமாக மீட்கப்பட்ட நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
35 வயது மதிக்கத்தக்க 5 அடி 5 அங்குல உயரமான இந்த நபர் பழுப்பு நிற மேலாடை அணிந்து காணப்படுவதுடன் கீழ் பகுதியில் அடை எதுவும் இருக்கவில்லை.
சடலத்தை மீட்ட கல்பிட்டி காவற்துறையினர் அதனை குளியாப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சடலத்தை அடையாளம் காண்பதற்காக கல்பிட்டி காவற்துறையினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Average Rating