கைதிகளின் விடுதலைக்கு அழுத்தம் கொடுக்கப்படும் – இராதாகிருஸ்ணன்…!!
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக மலையக மக்கள் முன்னணியும் தமிழ் முற்போக்கு கூட்டணியும் இணைந்து அழுத்தம் கொடுக்கும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்த அரசியல் கைதிகளில் மலையக இளைஞர் யுவதிகளும் உள்ளடங்குகின்றனர்.
வடகிழக்கு உட்பட ஏனைய அனைத்து மாவட்டங்களை சேர்ந்தவர்களும் உள்ளடங்குகின்றார்கள் என வவுனியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசியல் கைதிகளின் பிரச்சினை தற்போது நெருக்கடி நிலையை தோற்றுவித்துள்ள நிலையில், அவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றார்கள்.
யுத்தத்தில் முக்கிய பங்காளிகளாக செயற்பட்டவர்கள் பலரும் இன்று பல்வேறு பதவிகளில் இருக்கின்றார்கள்
ஆனால் யுத்தத்தின் போது சிறு தவறுகள் செய்தவர்கள் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், மறைந்த தலைவர் அமரர் பெரியசாமி சந்திரசேகரனின் நிலைப்பாட்டில் இருந்து தாம் சிறிதளவும் விலகிச் செல்லவில்லை என்றும் கல்வி ராஜாங்க அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
Average Rating