அந்தியூர் அருகே ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது…!!
அந்தியூர் அருகே உள்ள கோவிலூர் என்ற இடத்தை சேர்ந்தவர் சுரேஷ். தொழிலாளி. இவரது மனைவி வசந்தி (வயது 21). இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் வசந்தி மீண்டும் கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு பிரசவவலி ஏற்பட்டது.
உடனே சுரேஷ் 108 இலவச ஆம்புலன்சுக்கு போன் செய்தார். உடனே அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கோவிலூருக்கு ஆம்புலன்ஸ் புறப்பட்டு சென்றது.
அங்கு பிரசவ வலியால் துடித்து கொண்டு இருந்த வசந்தியை ஆம்புலன்சில் ஏற்றி கொண்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று கொண்டு இருந்தனர்.
இந்த ஆம்புலன்ஸ் புதுப்பாளையம் அருகே சென்ற போது வசந்திக்கு பிரசவ வலி அதிகமானது. இதை தொடர்ந்து ஆம்புலன்ஸ் வேனில் இருந்த மருத்துவ உதவியாளர் ஆனந்தகுமார், டிரைவர் சதாசிவம் ஆகியோர் வசந்திக்கு பிரசவம் பார்த்தனர்.
இதை தொடர்ந்து 108 ஆம்புலன்சிலேயே வசந்திக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதன்பிறகு அவர்கள் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
ஆம்புலன்சிலேயே பெண்ணுக்கு குழந்தை பிறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.
Average Rating