ரஷ்யாவை தொடரும் சோகம்: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 15 பொதுமக்கள் பலி..!!
ரஷ்யாவை சேர்ந்த ஹெலிகாப்டர் சைபீரியாவில் இன்று விழுந்து நொறுங்கியதில் 15 பொதுமக்கள் பலியானர்கள்.
இது பற்றி உள்நாட்டு போக்குவரத்து அதிகாரிகள் வெளியிட்டு அறிக்கையில், “22 பயணிகள் மற்றும் 4 ஊழியர்களுடன் சென்ற எம்.ஐ.-8 ஹெலிகாப்டர் மேற்கு சைபீரியாவின் ஐகர்கா நகரம் அருகே விழுந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பலியானார்கள். 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடம் தலைநகர் மாஸ்கோவில் இருந்து 2800 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டர் பறக்கத் தொடங்கிய 15 நிமிடத்திலேயே கட்டுப்பட்டை இழந்துவிட்டதாகவும், இதனால் ஹெலிகாப்டரை அவசரமாக தரையிறக்க முயன்றபோது விபத்து நடந்திருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில வாரங்களில் மட்டும் ஒரு பயணிகள் விமானம் (224 பேர் பலி), ஒரு போர் விமானம், தற்போது ஹெலிகாப்டர் விபத்து என அடுத்தடுத்து நடந்த மூன்று சம்பவங்களால் ரஷ்ய மக்கள் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர்.
Average Rating