சீனாவில் ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் பொன்னிற இலைகளைத் தூவும் 1400 ஆண்டு பழைய கிங்கோ மரம்…!!
Read Time:51 Second
சீனாவின் ஷோன்ங்னான் மலைப்பகுதியில் உள்ள புத்த துறவிகளின் மடாலயத்தில் இருக்கும் ‘கிங்கோ மரம்’ சுமார் ஆயிரத்து நானூறு ஆண்டுகளாக நவம்பர் மாதங்களில் தனது பொன்னிற இலைகளைத் தூவுவதை தனது வாடிக்கையாக வைத்துள்ளது.
சுமார் 200 மில்லியன் ஆண்டுகளாக இந்த மரத்தின் இனம் மாறாமல், அழியாமல் இருந்துவருவதால், இவை வாழும் படிமங்கள் எனவும் இப்பகுதி மக்களால் அழைக்கப்படுகின்றன.
சீனர்கள் பலரும் ‘மெய்டென்ஹேர்’ என அறியப்படும் இந்த மரங்களை, பார்வையிட இப்பகுதிக்கு படையெடுப்பதாக தெரியவந்துள்ளது.
Average Rating