அழகுராணி போட்டியில் சிறைக்கைதிகள்…!!
பிரேஸிலுள்ள சிறைச்சாலையொன்றில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கான அழகுராணி போட்டியொன்று அண்மையில் நடைபெற்றது.
ரியோ டி ஜெனைய்ரோ நகரிலுள்ள தெலவேரா புரூஸ் சிறைச்சாலையிலேயே இப்போட்டி நடைபெற்றது.
27 வயதான மிஷெல் நேரி ரேஞ்சல் எனும் பெண் இப்போட்டியில் முதலிடம் பெற்று, “மிஸ் தெலவேரா புரூஸ் 2016” அழகுராணியாக முடிசூட்டப்பட்டார்.
இவர் கொள்ளை மற்றும் விபசாரம் தொடர்பான வழக்குகளில் 39 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2010 ஆம் ஆண்டு முதல் அவர் இச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அழகுராணி போட்டியில் பங்குபற்றிய கைதிகள் நீச்சலுடை மற்றும் மாலைநேர ஆடை சுற்றிலும் பங்குபற்றினர்.
கைதிகளின் குடும்பத்தினர், 10 நடுவர்கள் மற்றும் ஆயுதமேந்திய காவலர்களின் முன்னிலையில் இப்போட்டிகள் நடைபெற்றன.
உள்ளூர் தொண்டர்கள் மூலம் இவர்களுக்கு ‘மேக் அப்’ செய்யப்பட்டிருந்தன. கடந்த வருடம் இப்போட்டியில் 22 வயதான அனா கரோலினா ரொஸா டி சௌஸா எனும் யுவதி முதலிடம் பெற்றிருந்தார்.
தன்னை சிறந்த நபராக்குவதற்கான கதவுகளை இப்போட்டி திறந்துவிட்டது என கரோலினா கூறியுள்ளார்.
Average Rating