பேருந்திலிருந்து தவறி வீழ்ந்த இளைஞன் சாவு..!!
புத்தளம் – சிலாபம் பிரதான வீதியின் பங்கதெனிய புகையிரக் கடவைக்கு முன்னால் அரைச் சொகுசு பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த பயணி ஒருவர் தவறி வீழ்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று திங்கட்கிழமை அவர் உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பண்டாரவளை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன், நேற்று மாலை கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிப் புறப்பட்டுள்ள அரைச் சொகுசு பயணிகள் பேருந்தில் பயணித்துள்ளார்.
குறித்த பேருந்து, புத்தளம் வீதியின் பங்கதெனிய புகையிரதக் கடவைக்கருகில் வேகத்தைக் குறைத்த நேரம், பேருந்திலிருந்து வெளியில் வீசப்பட்டு அந்தப் பேருந்தில் சிக்கிப் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர், அவர் உடனடியாக சிலாபம் ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய அரைச் சொகுசு பேருந்து பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு அதன் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Average Rating