சிறுமிகள் இருவர் துஷ்பிரயேகம்: ஒருவருக்கு சிறை, மற்றவர் தலைமறைவு…!!
புங்குடுதீவில் 13 வயது மகளை தந்தை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளதாக, சிறுமியின் தாயார் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.
குறித்த தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில், இருவருக்கும் இடையில் கடந்த 28ம் திகதி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த மனைவி கணவனுடன் மூன்று பிள்ளைகளையும் விட்டுவிட்டு பக்கத்து வீட்டில் இரவு தங்கியுள்ளார்.
தாயார் பக்கத்து வீட்டிற்கு சென்ற பின்னர் தகப்பனார் மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பின்னர் மறுநாளும் மகளை துஷ்பிரயோகம் செய்துவிட்டு, தந்தையார் தலைமறைவாகியுள்ளார். 13 வயதான குறித்த சிறுமி அழுது கொண்டு, தயாரிடம் தந்தையார் தன்னை ஏதோ செய்ததாக தெரிவித்த போது, தயார் 119 என்ற பொலிஸாரின் அவசர இலக்கத்திற்கு அழைத்து நடந்தவற்றைக் கூறியுள்ளார்.
பொலிஸார் சிறுமியை யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளமை வைத்திய சான்றிதழில் தெரியவந்ததன் பின்னர், தந்தையாரை தேடி வருகின்றார்கள்.
இதேவேளை, புத்தளம் பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தாக கூறப்படும், ஒருவருக்கு ஏழு வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து புத்தளம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் சந்தேகநபருக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு அதனைக் கட்டத் தவறின் மேலும் ஒருவருடங்கள் சிறையில் இருக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 75,000 ரூபா நஸ்டஈடு வழங்க வேண்டும் எனவும் இல்லாவிடில் மேலும் இரண்டு வருடங்கள் சிறையில் இருக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
2006ம் ஆண்டு ஜூலை மாதமளவில் புத்தளம் – தில்அடி பிரதேசத்தில் அப்போது 15 வயதே நிரம்பிய சிறுமி ஒருவரை கொலை செய்து விடுவதாக மிரட்டி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக, குறித்த நபருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டது.
சிறுமியின் தாயாரது இரண்டாவது கணவரான குறித்த சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த நிலையில் புத்தளம் மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இதனால் இவருக்கு எதிராக பகிரங்கப் பிடியானையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Average Rating