அடையாறு அருகே தனியார் பஸ் மோதி எலக்ட்ரீசியன் பலி…!!
Read Time:1 Minute, 4 Second
பனையூர் குடிமையாண்டி தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சாகுல் (25) எலக்ட்ரிசியன். இவர் நேற்று இரவு கிண்டியில் வேலை செய்து விட்டு மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார். பின்புறம் அவரது உதவியாளர் ஹர்சத்கான் (19) அமர்ந்து இருந்தார்.
அடையாறு பாலத்தில் திரும்பும்போது பின்னால் வந்த தனியார் ஆம்னி பஸ் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் சாகுல் தலை நசுங்கி அதே இடத்தில் பலியானார். படுகாயம் அடைந்த ஹர்சத்கான் ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
சாஸ்திரி நகர் போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் நவீன்குமாரை கைது செய்தனர்.
Average Rating