கோட்டூர்புரத்தில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 100 பேர் துப்புரவு பணி…!!
சென்னையை புரட்டி போட்ட மழை வெள்ளம் பெருமளவு வடிந்து விட்டது.
ஆனால் சேறும், சகதியும், குப்பைகளும் தெருக்களில் தேங்கி கிடக்கின்றன. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் குடியேற முடியாத நிலை ஏற்பட்டது. எங்கும் துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இதனை தடுக்க ஏராளமான மருத்துவ குழுக்கள் ரோந்து சுற்றி வருகிறார்கள். தெருக்களில் கிருமி நாசினிகளும், பிளிச்சிங் பவுடர்களும் போடப்படுகின்றன. இப்போது தெருக்களில் நடக்க முடியாத சூழ்நிலையும், வீடுகளுக்குள் குடியிருக்க முடியாத நிலை தான் மக்களுக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது.
உண்ண உணவு, உடுக்க உடை உள்ளிட்ட நிவாரண உதவிகள் ஏராளமாக குவிந்து விட்டன. ஆனால் தூய்மைப் பணிகள் தான் மந்தமாக நடைபெறுகிறது. வெறும் துப்புரவு பணியாளர்கள் மட்டுமே இந்த பணிகளை முடிப்பதற்கு பல நாட்கள் ஆகலாம். தேர்தல் நேரங்களில் தெரு தெருவாக அனைத்துக்கட்சி தொண்டர்களும் வந்து முகாமிட்டு தீவிரப்பணிகளில் ஈடுபடுகிறார்கள். அதேபோல இந்த இக்கட்டான நேரத்திலும் எல்லா கட்சிகளையும் சேர்ந்த தொண்டர்கள் திரண்டு வந்து தூய்மைப்பணியில் இறங்கினால் ஒரு சில நாட்களிலேயே சென்னை மீண்டும் சிங்கார சென்னையாக மாறிவிடும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால் துர்நாற்றம் வீசும் சாக்கடைகளில் இறங்கி பணிபுரிவதற்கு கட்சி தொண்டர்கள் தயாராக இல்லை என்ற குற்றச்சாட்டு மக்களிடம் எழுந்துள்ளது.
வெள்ளையும், சொள்ளையுமாக அலைவதற்குதான் அவர்கள் சரியானவர்கள் என்று குமுறுகிறார்கள்.
பொதுநல அமைப்புகள், தன்னார்வ தொண்டர்கள், ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள், முஸ்லிம் இயக்கங்கள் களத்தில் இறங்கி, எந்தவித அறிவிப்பும் இன்றி தூய்மை பணியில் ஈடுபட்டு உள்ளார்கள். பொதுமக்களின் இந்த ஆதகங்கள் நேற்றைய மாலை மலரிலும் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியினர் தூய்மைப் பணியில் இன்று ஈடுபட்டு உள்ளனர்.
மத்திய மந்திரி வெங்கய்யா நாயுடு மகள் தீபா வெங்கட் அடையாறில் வசித்து வருகிறார். அவரும் நெல்லூர் பாரதிய ஜனதா மேயர் அஜீத் இணைந்து பாரதிய ஜனதா தொண்டர்கள் 100 பேரை ஆந்திராவில் இருந்து வரவழைத்து உள்ளனர்.
அவர்கள் துடைப்பம், சாந்து சட்டி, முள் கரண்டி உள்ளிட்ட உபகரணங்களுடன் நேற்று இரவே சென்னை வந்து இறங்கினர். இன்று காலையில் கோட்டூர்புரம் குடிசைமாற்று வாரிய சாலையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டார்கள். தொடர்ந்து சென்னையில் சில நாட்கள் தங்கி இருந்து தூய்மைப்பணியில் ஈடுபடுகிறார்கள்.
இன்னும் சில கட்சிகள் இந்த மாதிரி நூற்றுக்கணக்கான தொண்டர்களை இறக்கி வேலை செய்தால் சென்னை பழைய நிலையை எட்டும் நாள் வெகுதூரம் இருக்காது என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்…
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating