யாழில் முச்சக்கரவண்டியுடன் ரயில் மோதி கோர விபத்து: சாரதி படுகாயம்..!! (இணைப்பு செய்தி)
Read Time:1 Minute, 1 Second
இன்று காலை 10.15 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்ற கடுகதி புகையிரதம் மோதியே முச்சக்கரவண்டி ஒன்று சுக்குநூறாகியது.
இன்று காலை 10.15 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்ற சண்டே ஸ்பெஷல் கடுகதி புகையிரதம் மீசாலை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள கடவையில் கடக்க முற்பட்ட ஓட்டோ மீது மோதியது.
முச்சக்கரவண்டியின் சாரதி கடுமையான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்
.இவ்வாறு விபத்துக்குள்ளானவர் மீசாலை சந்தியில் பிரசன்னா கூல் பார் வைத்திருக்கும் நந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
Average Rating