குழந்தை மரணம் தொடர்பில் பெண்ணொருவர் கைதானார்..!!
Read Time:1 Minute, 3 Second
தங்கியிருந்த வீட்டின் அறைக்குள்ளே பிறந்த குழந்தை இறந்தமை தொடர்பாக பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிலியந்தல மடபாத்த பிரதேசத்திலுள்ள வீடொன்றின் அறை ஒன்றில் தங்கியிருந்த 31 வயதான பெண் தெஹியத்தகண்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவரென தெரியவந்துள்ளது.
பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு கிடைத்த தகவலொன்றை அடுத்து மேற்கொண்ட விசாரணையில் இத்தகவல் வெளியானது.
கருச்சிதைவுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வகைகளும் அறையில் இருந்துள்ளன.
குழந்தையின் தந்தை யார் என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating