மட்டக்களப்பில் கடும் காற்று..!!
Read Time:55 Second
மட்டக்களப்பின் பல பகுதிகளில் இன்று காலை வீசிய கடும் காற்றினால் மரங்கள் பல முறிந்து விழுந்துள்ளதுடன் சொத்துகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளன.
இன்று காலை 9.30 மணிமுதல் 10.30 மணிவரையான நேரத்தில் கடுமையான காற்று வீசியது.
காற்றுடன் பெய்த அடை மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்க முற்றாக பாதித்தது.
மட்டக்களப்பு நகரம், காத்தான்குடி, ஆரையம்பதி உட்பட பல இடங்களில் காற்று காரணமாக மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.
நேற்றிரவு முதல் பெய்து வரும் அடை மழையினால் பல வீதிகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
Average Rating