போதைப் பொருள், அஸ்பிரின் எனக் கூறி நாய் உணவை விற்பனை செய்த யுவதி கைது…!!
அமெரிக்காவைச் சேர்ந்த யுவதியொருவர் நாய்களுக்களுக்கான உணவை, ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் அஸ்பிரின் மருந்து எனக் கூறி விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
22 மேகன் மேயர் எனும் இந்த யுவதி நாய்களுக்கான உலர் உணவுப்பொருளை பதப்படுத்தி, அதை ஹெரோயின் போதைப் பொருள் எனக் கூறி விற்பனை செய்து வந்தார்.
அண்மையில் மாறுவேடத்திலிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரிடமே தனது “போதைப் பொருளை” விற்பனை செய்தார்.
மேற்படி அதிகாரி அப்பொருளை ஆய்வுக்கு அனுப்பியபோது அது போதைப் பொருள் அல்ல என்பது கண்டறியப்பட்டது.
எனினும், மேகன் மேயர் கைது செய்யப்பட்டார். இவர் குற்றவாளியாக காணப்பட்டால் 12 வருடகாலம் வரையான சிறைதண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவர் ஏற்கெனவே திருட்டுக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating