ஈராக்கில் விமானப்படை அதிரடி தாக்குதல்: ஐ.எஸ். தீவிரவாத இயக்க தளபதிகள் 8 பேர் கொல்லப்பட்டனர்..!!
Read Time:58 Second
ஈராக்கின் அன்பர் மற்றும் ஹவிஜா பகுதிகளில் அந்நாட்டின் விமானப்படைகள் நடத்திய அதிரடி தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் மூத்த தளபதிகள் 8 பேர் கொல்லப்பட்டனர்.
தலைநகர் பாக்தாத்தில் இருந்து சுமார் 210 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஹவிஜா நகரை நேற்று சுற்றிச்சுற்றி வட்டமிட்ட “எப்.-16” ரக போர் விமானங்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளின்மீது குண்டுமழை பொழிந்த காட்சிகளை அந்நாட்டு ஊடகங்கள் அடிக்கடி ஒளிபரப்பி வருகின்றன.
இதேபோல், கடந்த மே மாதம் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கைப்பற்றப்பட்ட ரமாடி நகரை மீட்கவும் ஈராக் படைகள் உச்சகட்டப் போரில் ஈடுபட்டு வருகின்றன.
Average Rating