கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 219 திடீர் விபத்துக்கள் பதிவு..!!
Read Time:1 Minute, 19 Second
கடந்த 24 மணி நேரத்துக்குள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 219 திடீர் அனர்த்தங்கள் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய வைத்தியசாலையின் அவசர அனர்த்த பயிற்றுவிப்பு தாதியான புஸ்பா ரம்யானி இதனைத் தெரிவித்துள்ளார்.
கண்டி – யாழ்ப்பாண வீதியின் திரப்பனே – கல்வடுவாகம பிரதேசத்தில் சிற்றூர்தி ஒன்று மேதியதில் இரண்டு பெண்கள் பலியாகினர்.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
திரப்பனேயில் இருந்து கல்வடுவாகம பிரதேசம் நேக்கி பயணம் செய்த சிற்றூர்ந்தில் மோதுண்டு படுகாயமடைந்த இவர்கள் அநுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தனர்.
52 மற்றும் 62 வயதுகளை உடைய இவர்கள், கல்வடுவாகம பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில், சிற்றூந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
Average Rating