தனியார்துறை சம்பள உயர்வுக்கு அமைச்சரவை பூரண அங்கீகாரம்…!!
தனியார்துறை ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு குறித்த யோசனைக்கு அமைச்சரவை பூரண அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தொழில் அமைச்சர் டபிள்யு.ஜே.எம். செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
2016ஆம் வரவு செலவுத் திட்டத்தில் தனியார் துறை ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.குறித்த உத்தேச சட்ட மூலத்திற்கு அமைச்சரவையின் பூரண அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சில நிறுவனங்கள் தற்போதே ஆயிரம் ரூபாவினையும் சில நிறுவனங்கள் இரண்டாயிரத்து ஐநூறு ருபாவினையும் வழங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, சம்பள உயர்வு குறித்த சட்ட மூலம் எதிர்வரும் ஆண்டு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் எனவும், குறித்த சட்ட மூலம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளங்களும் உயர்த்தப்படும் என அமைச்சர் டபிள்யு.ஜே.எம். செனவிரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.
Average Rating