ஆயுள் தண்டனை அனுபவிக்கும் காதலனுடன் இணைந்து வர்த்தகர்களிடம் கப்பம் பெற்ற காதலி…!!
ஆயுள் தண்டனை அனுபவிக்கும் காதலனுடன் இணைந்து வர்த்தகர்களிடம் கப்பம் பெற்ற காதலி – 6 கையடக்கத் தொலை பேசிகளுடன் மாளிகாவத்தையில் கைது-
சிறையில் உள்ள தனது காதலனுடன் சேர்ந்து பாதாள உலகக் குழுத் தலைவன் ஒருவனின் பெயரைக் கூறி தொலைபேசி ஊடக அச்சுறுத்தல் விடுத்து வர்த்தகர்களிடம் கப்பம் பெற்று வந்த பெண்ணொருவரை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு மாளிகாவத்தையில் கைது செய்துள்ளது.
தெமட்டகொடையைச் சேர்ந்த குறித்த பெண்னை மாளிகாவத்தையில் வைத்து 6 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 30 ஆயிரத்து 550 ரூபாவுடன் கைது செய்ததாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு குறிப்பிட்டது.
கைது செய்யப்பட்ட 30 வயதான இந்தப் பெண் தனது காதலன் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ள நிலையிலேயே கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தி ஈஷி கேஸ் முறை மூலம் கப்பம் பெற்று வந்துள்ளமை தெரிய வந்துளள்தாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
இந் நிலையில் அப்பெண் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அவர் சுமார் 80 இலட்சம் ரூபாவை இவ்வாறு பல வர்த்தகர்களிடமிருந்து கப்பமாக பெற்றுள்ளதக தெரியவந்துள்ளதாகவும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.
Average Rating