ஆயுள் தண்டனை அனுபவிக்கும் காதலனுடன் இணைந்து வர்த்தகர்களிடம் கப்பம் பெற்ற காதலி…!!

Read Time:2 Minute, 0 Second

fffdஆயுள் தண்டனை அனுபவிக்கும் காதலனுடன் இணைந்து வர்த்தகர்களிடம் கப்பம் பெற்ற காதலி – 6 கையடக்கத் தொலை பேசிகளுடன் மாளிகாவத்தையில் கைது-

சிறையில் உள்ள தனது காத­ல­னுடன் சேர்ந்து பாதாள உலகக் குழுத் தலைவன் ஒரு­வனின் பெயரைக் கூறி தொலை­பேசி ஊடக அச்­சு­றுத்தல் விடுத்து வர்த்­த­கர்­க­ளிடம் கப்பம் பெற்று வந்த பெண்­ணொ­ரு­வரை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு மாளி­கா­வத்­தையில் கைது செய்­துள்­ளது.

தெமட்­ட­கொ­டையைச் சேர்ந்த குறித்த பெண்னை மாளி­கா­வத்­தையில் வைத்து 6 கைய­டக்கத் தொலை­பே­சிகள் மற்றும் 30 ஆயி­ரத்து 550 ரூபா­வுடன் கைது செய்­த­தாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு குறிப்­பிட்­டது.

கைது செய்­யப்­பட்ட 30 வய­தான இந்தப் பெண் தனது காதலன் ஆயுள் தண்­டனை கைதி­யாக சிறையில் உள்ள நிலை­யி­லேயே கைய­டக்கத் தொலை­பே­சி­களை பயன்­ப­டுத்தி ஈஷி கேஸ் முறை மூலம் கப்பம் பெற்று வந்­துள்­ளமை தெரிய வந்­து­ளள்­தாக விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் குறிப்­பிட்டார்.

இந் நிலையில் அப்பெண் தொடர்பில் முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­களில் அவர் சுமார் 80 இலட்சம் ரூபாவை இவ்­வாறு பல வர்த்­த­கர்­க­ளி­ட­மி­ருந்து கப்பமாக பெற்றுள்ளதக தெரியவந்துள்ளதாகவும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தனியார்துறை சம்பள உயர்வுக்கு அமைச்சரவை பூரண அங்கீகாரம்…!!
Next post குற்றச்சாட்டுக்களை மறுக்கும் சவுதித் தூதரகம்…!!