சுப்பர் மார்க்கெட்டிற்குள் மதுபோதையில் நுழைந்து பணம் செலுத்தாமல் உணவுகளை உட்கொண்ட யுவதி கைது…!!
அமெரிக்காவைச் சேர்ந்த யுவதியொருவர் மதுபோதையில் சுப்பர்மார்க்கெட் ஒன்றுக்குள் புகுந்து அங்கிருந்த உணவு மற்றும் பானங்களை கட்டணம் செலுத்தாமல் எடுத்துக்கொண்டு தனது இஷ்டம்போல் உட்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த 25 வயதான ஜோஸ்லீன் எலிடா எனும் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
இவர், புளோரிடா மாநிலத்தின் லெக்கன்டோ நகரிலுள்ள பிரபல சுப்பர் மார்கெட்ஒன்றுக்குள் புகுந்து பல வகையான உணவுப் பொருட்களையும் பானங்களையும் உட்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சில சிற்றுண்டி பக்கெற்றுகளிலிருந்த உணவுகளை எலிடா பகுதியளவில் உட்கொண்டுவிட்டு மிகுதியை அங்கேயே வைத்துவிட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இப்பொருட்களுக்கு எலிடா பணம் செலுத்தவில்லை.
பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, ஜோஸ்லீன் எலிடா கைது செய்யப்பட்டுள்ளார்.
தான் உணவுப்பொருட்களை பணம் செலுத்தாமல் எடுத்துக்கொண்டதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
பசியின் காரணமாக தான் அவ்வாறு செய்ததாகவும் தன்னிடம் பணம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Average Rating