14 வயது சிறுவனை காணவில்லை; பாட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு..!!
லிந்துளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை ரட்ணகிரிய பாமஸ்டன் தோட்டத்தைச் சேர்ந்த 14வயது மதிக்கதக்க சிறுவன் ஒருவனை காணவில்லை என சிறுவனின் பாட்டி லிந்துளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக லிந்துளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
14 வயதுடைய மகாதேவன் என்ற சிறுவன் கடந்த 19ம் திகதியில் இருந்து காணாமல் போயுள்ளதாக குறித்த சிறுவனின் பாட்டி தெறிவிக்கின்றனர்.
காணாமல் போன சிறுவன் நான்கு அடி உயரமும் மெலிந்த உடல் தோற்றத்தையும் உடைய இச் சிறுவன் கானாமல் போன தினம் இள நீள டெனிங் காற்சட்டடையும் மஞ்சள் மற்றும் கருப்பு நிறம் கொண்ட சட்டடையும் அனிந்து இருந்ததாக முறைபாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவன் குறித்து அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் வழங்பட்டுள்ளதாகவும் சிறுவன் குறித்த தகவல் தெரிந்தால் அருகாமையில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தகவல் வழங்குமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்
Average Rating