ஆப்கானில் பிரெஞ்சு உணவகத்தின் மீது தலிபான்கள் தற்கொலைப்படை தாக்குதல்: இருவர் பலி…!!

Read Time:2 Minute, 25 Second

07f062b4-6885-4e9b-b959-61af9082d6a5_S_secvpfஆப்கானிஸ்தானில் பிரெஞ்சு உணவகத்தின் மீது தலிபான்கள் நேற்று தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபட்டனர். தலைநகர் காபூலில் உள்ள லீ ஜார்டின் என்ற உணவகத்தில் புத்தாண்டு அன்று நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். 14 பேர் படுகாயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றும் முனைப்பில் தலிபான் தீவிரவாதிகள் சண்டையிட்டு வருகின்றனர். இதை முறியடிக்க தலிபான்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் அந்நாட்டு ராணுவம் அடிக்கடி விமான தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே அவ்வவ்போது இருதரப்பிற்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தையும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில தினங்களாக ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள ஹெல்மண்ட் மாகாணத்தை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் முனைப்பில் தலிபான்கள் தீவிர தாக்குதல் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தலைநகர் காபூலில் உள்ள பிரெஞ்சு உணவகம் ஒன்றின் மீது தலிபான் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் அந்த உணவகமே தீப்பிடித்து எரிந்தது.

கார் வெடிகுண்டு மூலம் இந்த தற்கொலைப்பை படை நடைபெற்றிருக்க முடியும் என்று காபூல் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தலிபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தையை தொடங்க பாகிஸ்தானில் வருகிற ஜனவரி 11-ம் தேதி நான்குவழி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்ற அறிவிப்பினை ஆப்கானிஸ்தான் அரசு வெளியிட்ட அடுத்த நாளில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீனாவில் ஒரு குழந்தை திட்டம் முடிவுக்கு வந்தது: புத்தாண்டு முதல் 2 குழந்தை பெற அனுமதி…!!
Next post எகிப்தில் படகு கவிழ்ந்து விபத்து: 18 பேர் பரிதாப பலி…!!