ஓடும் வேனுக்குள் திகார் ஜெயில் கைதிகள் பயங்கர மோதல்: ஒருவர் அடித்துக் கொலை…!!

Read Time:1 Minute, 34 Second

7e3e360f-9654-46aa-9798-83d63e6a588a_S_secvpfதிகார் சிறைச்சாலையில் இருந்து கைதிகளை கோர்ட்டுக்கு செல்லும் வழியில் வேனுக்குள் நடந்த மோதலில் ஒரு கைதி கொல்லப்பட்டார்.

திகார் சிறையில் இருந்து இன்று மதியம் கைதிகளை ஏற்றிக்கொண்டு சாகெத் கோர்ட்டுக்கு வேன் புறப்பட்டது. டெல்லி கவுஸ் காஸ் பகுதியைக் கடந்தபோது, கைதிகளிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இரு குழுவாகப் பிரிந்து ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில், ஒரு கைதி கொல்லப்பட்டதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

கொல்லப்பட்ட கைதியின் பெயர் மனோஜ் என்று கூறிய மூத்த அதிகாரி, வேறு விவரங்களை தெரிவிக்கவில்லை.

இதேபோல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரோகினி கோர்ட்டுக்கு செல்லும்போது வேனுக்குள் கைதிகள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதில் 2 பேர் இறந்தனர்.

கைதிகளை சிறைகளில் இருந்து நீதிமன்றங்களுக்கு ஆஜர்படுத்துவதற்காக கொண்டு செல்லும் பொறுப்பு, டெல்லி ஆயுதப்படையின் மூன்றாவது பட்டாலியன் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குன்னத்தூர் அருகே 10–ம் வகுப்பு மாணவி கொலையில் பரபரப்பு தகவல்கள்…!!
Next post செவ்வாய்பேட்டை அருகே தீ பிடித்து குழந்தை பரிதாப சாவு..!!