செவ்வாய்பேட்டை அருகே தீ பிடித்து குழந்தை பரிதாப சாவு..!!
Read Time:1 Minute, 9 Second
செவ்வாய் பேட்டை வெள்ள மேடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி செல்வி. இந்த தம்பதிக்கு இளவரசி (5) என்ற பெண் குழந்தை உள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ரமேஷ் தனது மாமியார் லட்சுமி வசிக்கும் அரண் வாயலுகு வந்தார்.
கடந்த 30–ந் தேதி லட்சுமி வீட்டில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டது. இளவரசி அங்கு விளையாடிக் கொண்டு இருந்தாள். அப்போது எதிர்பாராத விதமாக இளவரசி ஆடையில் விளக்கு தீ பட்டு எரிந்தது. இதில் இளவரசி கருகினாள்.
உடனே அவளை மீட்டு சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இன்று காலை இறந்தாள்.
இது குறித்து செவ்வாய் பேட்டை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Average Rating