எகிப்தில் ராணுவ தாக்குதலில் 26 தீவிரவாதிகள் பலி – 25 பேர் கைது…!!
Read Time:1 Minute, 2 Second
எகிப்தில் வடக்கு சினாய் தீபகற்ப பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் மீது ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. அங்குள்ள முக்கிய நகரங்களான ரயி, ஷேக் ஷவாயத் மற்றும் அல் – ஆரீஷ் ஆகிய நகரங்களில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது.
அதில் 26 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 25 பேர் கைது செய்யப்பட்டனர். தீவிரவாதிகள் பதுங்கியிருந்த வீடுகள் மற்றும் பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டன. சினாய் தீபகற்ப பகுதியில் தீவிரவாதிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. முன்னாள் அதிபர் மோர்சி பதவி நீக்கம் செய்யப்பட்ட 2013–ம் ஆண்டிற்கு பிறகு 600 போலீசார் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating